×

திண்டுக்கல் நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ,, பிரசாரம்

 

திண்டுக்கல், ஜூன் 22: திண்டுக்கல் மாநகராட்சிக்கு முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் டூவீலர் பிரசாரம் நடைபெற்றது. இதன்படி நேற்று முத்தழகுபட்டியில் இந்த பிரசாரத்தை மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். நகரச்செயலாளர் அரபுமுகமது, ஒன்றியக்குழு செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ஆஸாத், பாலாஜி, முகேஷ், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிபாசு, கணேசன், மாரியம்மாள் மற்றும் நகர்க்குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் திண்டுக்கல் புறநகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, வீட்டுமனை வழங்கிட வேண்டும். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டமைப்பை நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இதன்படி அய்யன்குளம், ஆர்.எம்.காலனி, உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியினரின் டூவீலர் பிரசாரம் நடைபெற்றது.

The post திண்டுக்கல் நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ,, பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Marxist Commune ,Prasaram ,Dindigul Corporation ,Mulla Periyar ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...